Sunday 8 July 2012

விலையேறும் நம்பிக்கைகள்!














கருமங்கள் கை கூடாமல்.
சறுக்குகிற நேரமெல்லாம்.
சனியன் நினைவுக்கு வருகிறான்!

ஆச்சியும், அப்புவும்,
அன்போடு சேர்த்து,
ஊட்டி வளர்த்த நம்பிக்கைகள்!

சனிபகவானுக்குச் சால்வையோடு,
சந்தனமும் பூசியுள்ளார்கள்!
பிரபலங்கள் எல்லாம்,
வரிசையில் நிற்கின்றன!
எல்லோரும் படித்தவர்கள்!
எனக்கும் பெருமையாக இருக்கிறது!

முதல் முறையாக,
அப்புவிலும் ஆச்சியிலும்,
அளவில்லாத மரியாதை,
அணையுடைத்துப் பாய்கிறது!

எண்ணைச் சட்டிகளும்,
பெரிதாகி இருந்தன!
புலத்தில் பெரிய பிரச்சனைகள்,
பெரிய சட்டிகளும் தேவை தான்!

வரிசை முடிவில்,
பெரியவர் சிரித்தார்!
ஓய்வு பெற்றவராம்!
முகத்தில் அமைதியின்,
முத்திரை தெரிந்தது!
சனியன் விலகியதால்,
சாந்தமாகியது போலும்!

சனியனுக்கு ஒருக்காச்,
சாந்தி செய்ய வேணும்!

விலையைச் சொன்னார்!
தலை கிறு கிறுத்தது!

சனியனைப் பார்த்தேன்!
அவனும் சிரித்தான்!
ஏளனச் சிரிப்பு!







  

No comments:

Post a Comment